முல்லைப் பெரியாறும் தேச ஒற்றுமையும்!- published in News Vikatan


- அறந்தை அபுதாகிர்

மிழகம் எப்போதும் தண்ணீருக்காக தவமிருக்க வேண்டும் என்பது தலைவிதி போலும். அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா வரிசையில் தற்போது கேரளமும் வரிந்துகொண்டு நிற்கிறது.

முல்லைப் பெரியாறு தீர்வுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு டிசம்பர் 5-தேதி இறுதி கட்ட கூட்டத்தை கூட்டப்பட வேண்டிய நிலையில், நீதியின் நியாமான பார்வையை தடுக்க முயல்கின்றது கேரளம், "அழுத பிள்ளை பால் குடிக்கும்," என அழிச்சாட்டியம் செய்கிறது.

கர்னல் பென்னி குக்கினால் கி.பி.1895-ல் கட்டி முடிக்கப்பட்டு, தென் தமிழகத்தை வளமாக்கிய முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என கூக்கிரலிடுகிறது கேரளா. நில நடுக்கத்தினால் அணை உடைந்து, கேரளாவின் 4 மாவட்டங்கள் அழிந்துவிடும் என பொய் பிரசாரத்தில் உச்சாஸ்தாயில் உளருகிறது, அம்மாநில அரசு.

உலக வரலாற்றில் இதுவரை அணைகள் உடைந்தற்கு காரணம், பெரும் மழையினால் ஏற்படுகின்ற வெள்ளமும், கட்டுமான குறைபாடுகளுமே.

சமீபத்தில் வெளிவந்த 'டேம் 999' என்ற திரைப்படம், சீனாவின் ஹீய் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பான்கியோ அணை 1975-ல் உடைந்ததை பற்றி கூறினாலும், இதன் இயக்குநர் சோகன் ராயின் கருத்துக்கள், முல்லைப் பெரியாறு அணை உடையப் போவதாக குறிக்கின்றன. இது ஒரு  பொய்ப் பிரசாரத்தின் தொழில் நுட்ப பரிமாண வளர்ச்சி. உண்மையில், இந்த பான்கியோ அணை உடைந்தற்குக் காரணம், சீனாவில் 1000 ஆண்டுகளில் ஏற்படாத ஒரு பெரும் மழையும், கட்டுமானத் தவறால் ஏற்பட்ட விரிசல்களும்தான்.

முல்லைப் பெரியாறு அணை 1994-ல் நவீன தொழில் நுட்பத்தால் மேம்படுத்தபட்டு மிகவும் உறுதியாக உள்ளது எனவும், ஒருவேளை அணை உடைந்தால், வெளியேரும் சுமார் 6 டிஎம்சி நீர் மலை பாதை வழியாக இடுக்கி அணையை அடையும். இதற்கும் சுமார் 4 மணி நேரம் பிடிக்கும் என ஆதாரங்களுடன் தமிழக முன்னாள் பொது பணியாளர் சங்கம் ஆணித்தரமாக கூறுகிறது.

மேலும், 1500 ஆண்டுகள் பழமையான கல்லணை நவீன தொழில் நுட்பத்தால் சீரமைக்கப்பட்டு இன்று வரை கம்பீரமாக நிற்ப‌தை எடுத்துரைக்கிற‌து.

இந்நிலையில், கேர‌ளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பின‌ர்க‌ள் க‌ட்சி வேறுபாடின்றி இப்பிரச்னையை முன்வைத்து நாடாளுமன்ற வாயிலில் த‌ர்ணா போர‌ட்ட‌ம் ந‌ட‌த்திய‌ போது, ஒரு கூட்ட‌ம் டெல்லி பாட்டியலா நீதி ம‌ன்ற‌த்தில் ஜாமீனுக்கு கையெழுத்திட‌வும், ம‌று கூட்ட‌ம் "அம்மா இன்றி அணுவும் அசையாது," என அமைதி காத்த‌து.  எதிர்ப்புப் போர‌ட்ட‌த்தில் எஞ்சியது சில‌ பேர் ம‌ட்டுமே.

அணை உடைய‌ப்போகிற‌து என‌ கார‌ண‌ம் காட்டி, புதிய‌ அணை க‌ட்டுவோம் என‌ மார்தட்டி, முல்லைப் பெரியாறு ப‌குதியை முழுதாக‌ த‌ன் க‌ட்டுக்குள் கொண்டும் முய‌ற்சியை கேர‌ள‌ அர‌சு துவ‌ங்கி காய்க‌ளை ந‌க‌ர்த்துகிற‌து. உண்மையில் இது கேர‌ள‌ மின் உற்ப‌த்திக்காக‌வும், த‌மிழ‌க‌த்தை வ‌ஞ்சிக்க‌ வேண்டும் என் நோக்க‌மே த‌விர‌ வேறில்லை.

ஏறத்தாழ 10 ல‌ட்ச‌ம் த‌மிழ‌க‌ விவசாயிக‌ளின் வாழ்வார‌த்தை அழித்து, தென் த‌மிழ‌க‌த்தை மீண்டும் க‌ற்கால‌துக்கு அழைத்து செல்ல‌ முற்ப‌டும் கேர‌ளாவின் குறுகிய ம‌ன‌ப்பான்ம‌யை த‌மிழ‌க‌ம் த‌டுக்க‌ வேண்டும்.

மனிதத் த‌வ‌றினால் உடைய‌ப்போவ‌து அணைய‌ல்ல‌.. த‌மிழ‌க‌த்தின் எதிர்கால‌மும், இந்தியாவின் ஒற்றுமையும், இறையாண்மையும்தான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!- published in Vikatan.com

மின் தட்டுப்பாடும் மோசமான அரசும்....

காட்டுவாசி